மகனை துடிதுடிக்க கொன்று தற்கொலைக்கு முயன்றது ஏன் : தந்தை பரபரப்பு வாக்குமூலம்!!

983


தமிழகத்தில் தனது 7 வயது மகனை கொன்றுவிட்டு, தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஊர்மில் டோலியா, இவர் கே.கே.நகரில் உள்ள செல்போன் சர்வீஸ் கடையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி கலைச்செல்வி, மகன் மாதவ் டோலியா(7, ஊர்மில் டோலியா கடந்த 15 நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.



இந்நிலையில் நேற்றிரவு கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம், விரைவாக கடையை மூடிவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார்.



அதன் பின்னர் தன் மனைவியிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு, தன் மகன் மாதவ் டோலியாவை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், இரவு வெகுநேரமாகியும் ஊர்மில் டோலியா வீடு திரும்பவில்லை.


இதனால் பதற்றமடைந்த அவரது மனைவி கலைச்செல்வி, கடை ஊழியர் ஒருவரை தொலைபேசியில் அழைத்து கடைக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

குறித்த ஊழியர் கடைக்கு சென்று பார்த்தபோது ஊர்மில், மாதவ் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர், அப்போது சிறுவன் மாதவ்வின் கைகள் வெட்டப்பட்டிருந்தன.


இதன் பின்னர், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஊர்மிலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வடபழனி பொலிசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊர்மில் டோலியாவிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்றனர். அதில் ஊர்மில் டோலியா கூறுகையில்,

‘கடன் தொல்லையால் அதிகமாக சிரமப்பட்டு வந்ததால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன். என்னுடைய இரண்டாவது மகன் மாதவ் டோலியாவை விட்டுப் பிரிய மனமில்லை.


இதனால், அவனையும் என்னோடு அழைத்துச் செல்லத்தான் இந்த முடிவை எடுத்தேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், தனது மகனின் நிலை குறித்து ஊர்மில் கேட்டபோது, அவன் நன்றாக இருக்கிறான் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.