மருத்துவருக்கு பதிலாக வந்த ஏசி திருத்துனர்: பரிதாபமாக போன சிறுவனின் உயிர்!!

576

இந்தியாவில் அம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவர் என பொய்யாகி கூறி ஏ.சி மெக்கானிக் வந்ததால் நோயாளி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த அரிச்ஜித் தாஸ்(16) என்ற சிறுவனுக்கு திடீர் உடல்நல கோளாறு ஏற்பட்ட நிலையில் அவனை அங்குள்ள சிறிய மருத்துவமனைக்கு பெற்றோர் கூட்டி சென்றனர்.

அங்கு தன்னை மருத்துவர் என கூறிய சர்பராஸ் உடின் (26) என்பவர் சிறுவனுக்கு ஏதோ சிகிச்சையளித்து பின்னர் வேறு பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என பெற்றோரிடம் கூறி 8000 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார்.

இதையடுத்து அங்கு அம்புலன்ஸ் வர தாஸும், உடினும் மட்டும் உள்ளே ஏறி கொண்டனர். தாஸின் பெற்றோர் அனுமதிக்கப்படாத நிலையில் தனி காரில் வந்தார்கள்.

ஆனால் போகும் வழியிலேயே தாஸுக்கு உடல் நிலை மோசமாக அம்புலன்ஸியில் இருந்த செயற்கை சுவாச கருவியை கூட அவனுக்கு உடினால் பொருத்த முடியவில்லை.

இதையடுத்து தாஸ் பரிதாபமாக உயிரிழந்தான், அப்போது தான் உடின் மருத்துவரே கிடையாது எனவும், ஏ.சி மெக்கானிக்காக வேலை செய்பவர் எனவும் தெரியவந்தது.

இது குறித்து தாஸின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் அம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் சர்பராஸ் உடினை கைது செய்துள்ளனர்.