டிடிவி தினகரனின் அநியாயத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை : நாஞ்சில் சம்பத் விலகல்!!

415

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விலகியுள்ளார்.

ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் கண்டு அபார வெற்றி பெற்றவர் டிடிவி.தினகரன்.

அதன்பின் தமிழக அரசியலில் தனிச்சையாக செயல்பட்டு வந்த அவர், நேற்று முன்தினம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்திருந்தார்.

ஆரம்பம் முதலே தினகரனுக்கு ஆதரவாக பல கருத்துகளை வெளியிட்டு வந்த திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கு அந்த பெயரில் உடன்பாடு இல்லை என பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணாவையும், திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி கட்சி நடத்த தினகரன் நம்புகிறார். அவருடைய நம்பிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தினகரனின் இந்த அநியாயத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தலைகளை எண்ணிய தலைவர்களுக்கு மத்தியில் இதயங்களை எண்ணியவர் அண்ணா. அவர் பெயர் இல்லாத இடத்தில் இனி நான் இல்லை என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.