வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் பௌத்த விகாரை ஒன்றினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கசிந்த தகவலையடுத்து மாவட்ட செயலகத்திற்கு ஊடகவியலாளர்கள் விரைந்தனர்.
அச் சமயத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக ஓர் அத்திவாரம் வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.
இதனையடுத்து இவ் விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,
பௌத்த, கிறிஸ்தவ, இந்து வழிபாட்டுத் தளம் அமைப்பதற்காகவே அவ்விடத்தில் அத்திவாரம் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கில் 1000 பௌத்த விகாரைகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வவுனியாவில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.