பிரித்தானியாவில் இளம் யுவதியை துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு நேரவுள்ள கதி!!

310

பிரித்தானியாவில் இளம் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கையருக்கு தண்டனை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

17 வயதான இளம் பெண்ணை துஷ்பிரயோகம் செய்து விட்டு குறுந்தகவல் மூலம் இலங்கை இளைஞன் மன்னிப்புக் கோரியுள்ளார்.

2016ஆம் இடம்பெற்ற துஷ்பிரயோகம் தொடர்பான வழங்கு விசாரணை நேற்று முன்தினம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மன்னிக்குமாறு குறித்த இலங்கையர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dumfries பகுதியில் வாழும் ரொஹான் கொஸ்டா என்ற 35 வயதான இலங்கையர், கடந்த 2016ஆம் ஆண்டு வீடு ஒன்றில் வைத்து யுவதியை துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன் தனது குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.

எனினும், Edinburgh உள்ள உயர்நீதிமன்றத்தில் 17 வயதான ஒருவரைக் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த இலங்கையருக்கு Glasgow நீதிமன்றத்தில் அடுத்த மாதம் தண்டனை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் பிறந்த கொஸ்டா, அந்த பெண்ணை பல முறை தன்னுடன் பாலியல் உறவு கொள்ளுமாறு தொந்தரவு செய்துள்ளார்.

எனினும் அந்த யுவதி தன்னை விட்டு விடுமாறு பல முறை அழுது கெஞ்சியுள்ளார். அங்கிருந்து அவரை தள்ளிவிடவும் குறித்த யுவத முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் சத்தம் கேட்டு வந்த நபர் ஒருவர், உடனடியாக அவசர சேவை இலக்கமான 999 என்ற இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் “மன்னிக்கவும்.. நான் குடிபோதையில் இருந்தேன்.. என குறித்த இலங்கையர், அந்த யுவதிக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். அடுத்த குறுந்தகவலில் தனக்கு மன்னிப்பு வேண்டும் என கேட்டுள்ளார்.

அதன் பின்னரும் அவருடன் பாலியல் தொடர்புகளை அவர் வைத்துள்ளார் என நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

எனினும் “நீதிபதி அவர்களே நான் அப்படி செய்யவில்லை என நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டிற்கான தண்டனை அடுத்த மாதம் வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.