இலங்கை ரசிகருக்கு கொடுத்த வாக்குறுதி : வீட்டுக்கு சென்று காப்பாற்றிய இந்திய அணித் தலைவர்!!

320

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் ஷர்மா இலங்கை ரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியை பார்வையிட சென்ற இலங்கை ரசிகர் மொஹமட் நிலாமின் தந்தை சுகயீனமடைந்தார். இதன்போது திடீரென விமான பயண நாளை மாற்றுவதற்காக தேவைப்பட்ட பணத்தை இந்திய வீரர் ரோஷித் ஷர்மா வழங்கியிருந்தார்.

அடுத்த முறை இலங்கை வரும் போது நிலாமின் வீட்டிற்கு வந்து தந்தையை பார்ப்பதாக வாக்குறுதியும் வழங்கியுள்ளார். அதற்கமைய நேற்று முன்தினம் ரோஹித் ஷர்மா நிலாமின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

“பல வருடங்களாக எனக்கு நிலாமை தெரியும். என்னை பல வருடங்களாக உற்சாகப்படுத்துகின்றார். கடந்த டிசம்பர் மாதம் தனது தந்தை சுகயீனமடைந்ததனை கூறி நிலாம் என்னிடம் அழுத காட்சி இன்னமும் எனக்கு நினைவில் உள்ளது.

அப்போது அவருக்கு வாக்குறுதி ஒன்றை வழங்கினேன். இலங்கை வரும் போது வீட்டிற்கு வருவேன் என கூறினேன். இன்று எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ரோஹித் என்பவர் சுத்தமான மனதை கொண்ட ஒருவர். அன்று எனது குடும்பத்திடம் இருந்து தந்தைக்கு முடியவில்லை என அழைப்பு கிடைத்தது. உண்மையாக என்னிடம் பணம் இருக்கவில்லை, எனினும் இன்னும் ஒருவரின் உதவியுடன் ரோஹித் ஷர்மாவுக்கு தகவல் கிடைத்து எனக்கு உதவினார்.

இந்திய அணியில் அனைவரும் எனக்கு நன்கு பழக்கம். எனினும் ரோஹித் அனைவரையும் விட ஒரு படி மேலானவர் என நிலாம் இந்திய ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெற்று வரும் சுதந்திர கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் கலந்து கொண்டுள்ள இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோவைக் காண