தாயகத்தை சோகத்தில் ஆழ்த்திய துன்பியல் சம்பவம் : கணவனுக்காக காத்திருந்த மனைவி மரணம்!!

775

தாயகத்தில் பெரும் துன்பியல் சம்பவம் ஒன்று பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரசியல் கைதியான தனது கணவனின் விடுதலைக்காக காத்திருந்த மனைவி, சோகம் தாங்க முடியாமல் மன ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஆனந்தசுதாகர் யோகராணி என்ற பெண்மணியே கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.

மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஆயுள் தண்டனை கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரன் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

அவரது மனைவி ஆனந்தசுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். இவரின் இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்றது.

இதில் பங்கேற்பதற்கு ஆனந்தசுதாகர் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, மீண்டும் பொலிஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்.

தந்தை சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியாக ஆனந்த சுதாகருககு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

தந்தை 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இரண்டு பிள்ளைகளும் தற்போது தந்தையை பிரிந்தும் தாயை இழந்துள்ளனர்.

வீடியோவைக்கான