வவுனியாவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!!

498

 
சர்வதேச மகளிர் தின நிகழ்வு (2018) வவுனியா நகர மகளிர் சங்கத்தினரால் நேற்று (18) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா சூசைப்பிள்ளையார் குளம், கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொதுநோக்கு மண்டபத்தில் வவுனியா நகர மகளிர் சங்கத்தின் தலைவி இம்மானுவேல் லூர்த்தம்மா தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட சமூர்த்தி முகாமையாளர் திருமதி சர்வலோஜினி சந்திரகுமார் கலந்துகொண்டிருந்தார்.

கணவனை இழந்தபோதும் உழைப்பின் மூலம் சமூகத்தில் சாதித்த சிறந்த பெண்களை மகளிர் தின நிகழ்வில் கௌரவித்து பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தது.

நிகழ்வில் பெண்கள், சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ்.சுபாஜினி, வவுனியா நகர சமூர்த்தி உத்தியோகத்தர் சிறிகுமார் கீதாஞ்சலி, வவுனியா நகரம் அபிவிருத்தி உத்தியோகத்தர் இன்பமதி தயாநிதி, வவுனியா சிறுவர் பெண்கள் பிரிவு உப பொலிஸ் உத்தியோகத்தர் திருமதி சுவர்ண திலகரத்தின, வவுனியா கற்குளி பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையம் சகோதரி திருமணி, வவுனியா வர்த்தகசங்கத் தலைவர் ரி.கே.ராஜலிங்கம், வவுனியா முதியோர் சங்கத்தின் தலைவர் தா.சலசலோசன், கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.செல்வராசா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.