வவுனியாவில் பெண் கரடி தாக்கியத்தில் ஒருவர் படுகாயம்!!

501

வவுனியா, ஓமந்தை கொம்புவைத்தகுளம் காட்டில் நேற்று மாலை தேன் எடுக்க சென்ற சிலரை கரடி தாக்கியுள்ளது. அதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதர்பனிக்கமயிலங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான நபரே படுகாமடைந்துள்ளார்.

இவர் மேலும் இரண்டு பேருடன் இணைந்து காட்டில் தேன் எடுக்க சென்றுள்ளார். அப்போது 6 குட்டிகளுடன் இருந்த பெண் கரடி 42 வயதான நபரை தாக்கியுள்ளது.

கரடி தாக்கியத்தில் இவரது காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.