சிலிண்டரை வெடிக்க வைத்து தாய், மகள்கள் தற்கொலை!!

601

தமிழகத்தில் சிலிண்டரை வெடிக்க வைத்து, தாய் மற்றும் மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்தோட்டை அடுத்த தயிர்பாளையம் கிராமத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இக்கிராமத்தில் வசிக்கும் தாய் ஜெயமணி, மகள்கள் தனுஷ்யா, பவித்ரா ஆகியோரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஜெயமணியின் கணவர் ராஜா வயலுக்கு சென்றிருந்த வேளை, மகள்களுடன் தாய் ஜெயமணி சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

சிலிண்டர் வெடித்து மூவரும் பலியாகி இருக்கலாம் என பொலிசார் சந்தேகித்த நிலையில், விசாரணையில் தற்கொலை என தெரியவந்துள்ளது. இதற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.