ஒரே ஒரு பேஸ்புக் பதிவால் கவிழும் நோர்வே அரசு!!

318

நோர்வே நாட்டில் எதிர்க்கட்சி குறித்து பேஸ்புக்கில் பெண் அமைச்சர் ஒருவர் பதிவிட்ட கருத்தால் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நோர்வேயில் பிரதமர் எர்னா சொல்பெர்க் தலைமையில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் ஆட்சி நடக்கிறது. தற்போது இது மைனாரிட்டி நிலையில் உள்ளது.

இந்த நிலையில் அரசியல் அங்கம் வகிக்கும் நீதித்துறை பெண் அமைச்சர் சில்வி லிஸ்தாக் தமது பேஸ்புக் பக்கத்தில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில் 2011ம் ஆண்டில் தொழிலாளர் கட்சியின் ஆன்டர்ஸ் பெக்ரிங் பிரிவிக் தலைமையில் இருந்த ஆட்சி தீவிரவாதிகள் மீதான தாக்குதல் என்ற பெயரால் இளைஞர்கள் முகாமின் மீது தாக்குதல் நடத்தியது என தெரிவித்து இருந்தார்.

இது தொழிலாளர் கட்சிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து அமைச்சர் சில்வி லிஸ்தாக் தமது பேஸ்புக்கில் பதிவு செய்திருந்த தனது கருத்தை நீக்கிவிட்டார்.

இருந்தும் தொழிலாளர் கட்சியின் கோபம் தணியவில்லை. இதனையடுத்து நீதித்துறை அமைச்சர் சில்வி லிஸ்தாக் மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இத்தீர்மானம் வெற்றி பெற்றால் ஏற்கனவே சிறுபான்மையாக உள்ள அந்த அரசு கவிழும் அபாயத்தில் உள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 22 ஆம் திகதி வலதுசாரி போராளியான AndersBehring Breivik தலைநகர் ஓஸ்லோவில் மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

மட்டுமின்றி துப்பாக்கியால் நடத்திய தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலும் இளைஞர்களே கொல்லப்பட்டனர்.

குறித்த சம்பவத்தை சுட்டிக்காட்டியே அமைச்சர் சில்வி தமது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களுடன் தொழிலாளர் கட்சி மீது அந்த கருத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.