கனடாவில் காணமால் போன இளம்பெண் சடலமாக மீட்பு : பொலிஸ் தீவிர விசாரணை!!

345


நான்கு மாதங்களுக்கு முன் கனடாவில் மாயமான அவுஸ்திரேலிய இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தைச் சேர்ந்தவர் அலிசான் ரஸ்பா(25), கனடாவின் Whistler நகருக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன் நவம்பர் 23-ஆம் திகதியன்று ஸ்கை ரெசார்ட் பகுதியில் இருந்து இவர் மாயமானதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதன் அடிப்படையில் பொலிசார் நடத்திய விசாரணையில், நவம்பர் 22-ஆம் திகதியன்று குறித்த பெண் உணவகம் ஒன்றில் இருந்து வெளியேறி பேருந்தில் சென்றது தெரியவந்தது.



அதன்பின் கடந்த 4 மாதங்களாக பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்காத அலிசா, குறித்த பகுதியில் உள்ள உறைந்த ஏரி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இது குறித்து அல்சாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மரணம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.