ஷமி எனக்கு நண்பர் மட்டுமே : சூதாட்டக் கும்பலைச் சேர்ந்த அலீஷ்பா பரபரப்பு பேட்டி!!

599

சூதாட்ட கும்பலை சேர்ந்த அலீஷ்பா என்ற பெண், கிரிக்கெட் வீரர் ஷமி தனக்கு நண்பர் மட்டுமே என தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான், கடந்த 3 ஆண்டுகளாக தனது கணவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

முதலில் ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக தெரிவித்த ஹசின் ஜகான், பின்னர் அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து, ஷமியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், தனது கணவர் பாகிஸ்தானைச் சேர்ந்த அலீஷ்பா என்ற பெண்ணுடன் சேர்ந்து, சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஹசின் ஜகான் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது இதுகுறித்து அலீஷ்பா கூறுகையில், ‘நானும் ஷமியும் நல்ல நண்பர்கள். ஷமியின் மனைவி கூறுவது போல எங்களுக்குள் எந்த விதமான மோசமான தொடர்பும் இல்லை.

அவர் ஏன் அப்படி குற்றச்சாட்டு வைக்கிறார் என்று தெரியவில்லை. பொலிசார் தான் இதில் விசாரிக்க வேண்டும். நாங்கள் பேஸ்புக் மூலம் நண்பர்கள் ஆனோம், அவரை எனக்கு மூன்று ஆண்டுகளாக தெரியும்.

முதலில் ரசிகையாக இருந்தேன், கொஞ்சம் கொஞ்சமாக பேசி தற்போது நண்பர்கள் ஆகியுள்ளோம், எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘நான் துபாய் சென்று இருந்த போது, ஷமியும் அங்கு வந்து இருந்தார். அப்போது நாங்கள் சந்தித்துக் கொண்டோம். இது எதிர்பாராமல் நடந்த சந்திப்பு’ என தெரிவித்துள்ளார்.