வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகமட்ட முதியோர் சங்கம் அங்குரார்ப்பணம்!!

848

 
வெண்கலச்செட்டிகுள பிரதேச செயலகத்தில் இன்று (21.03.2018) புதன்கிழமை பிரதேச செயலக மட்ட முதியோர் சங்கம் அங்குரார்ப்பனம் பிரதேச செயலாளர் கை.சிவகரன் தலைமையில் நடைபெற்றது.

பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பல கிராமங்களைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான மூத்தோர்கள் பங்குகொண்டனர்.

தலைவாரக நயுமுதீனும் , செயலாளராக தர்மரட்ணமும் , பொருளாளராக ஞானசிகாமணியும் தெரிவு செய்யப்பட்டனர் . பதினொரு பேர் கொண்ட நிர்வாக்குழு தெரிவு செய்யப்பட்டது.

கடந்த காலங்களில் சிறப்பாக இயங்கி வந்த இச்சங்கத்தின் செயற்பாடுகள் இடையில் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. தற்போது புதிய நிர்வாக சபை பல திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளது.

புதுவருடதினத்தை முன்னிட்டு இவர்கள் ஆன்மீக சுற்றுலா ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.சண்முகநாதன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், மற்றும் கிராம சேவை உத்தியொகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.