கொழும்பில் 4 ஏக்கரில் பிரமாண்டமாக அமைக்கப்படவுள்ள பாரிய ஹோட்டல்!!

279

இலங்கையில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமான ஹோட்டல் தொகுதி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The One Sri Lanka என்ற பாரிய ஹோட்டல் தொகுதி மற்றும் The Ritz – Carlton Residences என்ற வீட்டுத் தொகுதி ஒன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான தெளிவூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பை மையமாக வைத்து இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக செலவிடப்படும் தொகை 500 மில்லியன் டொலர்களாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கையிலுள்ள 3000 இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கவுள்ளது.

இதன் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய வளர்ச்சியை பெற முடியும் என திட்டத்தின் பங்குத்தாரர் எலெக்ஸ் லுவெல் தெரிவித்துள்ளார்.

நவீன ஹோட்டலில் 473 அறைகள் மற்றும் வீட்டுத் தொகுதியில் 638 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

செயற்றிட்டத்தின் முதற்கட்ட பணிகள் கடந்த செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டில் அனைத்து நிர்மாண பணிகளும் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.