தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் கடைசி வார்த்தைகள்!!

331

இந்தியாவில் 9 ஆம் வகுப்பு சிறுமி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நொய்டாவில் இக்ஷா ராகவ் ஷா என்ற 15 வயது சிறுமி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிறுமி பள்ளி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றும், இதனால் அவளது ஆசிரியர்கள் அவளை திட்டியதாக தெரிவித்தனர்.

இதன் காரணமாக சிறுமி மிகுந்த மனவேதனையுடன் இருந்ததாக அச்சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிறுமியின் நோட்டி புத்தகத்தில் நான் தோற்றுவிட்டேன், நான் என்னையே வெறுக்கிறேன் என ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். மேலும் அந்த பக்கத்தில் தனது கையெழுத்துக்களை ஏராளமாக கிறுக்கியுள்ளார்.

இது சிறுமியின் கையெழுத்துதானா என்பது குறித்து அவரது பெற்றோர்களிடம் காவல்துறையினர் உறுதிசெய்து கொண்டனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், இது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம், மாணவி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் சிபிஎஸ்இ வழங்கியுள்ள அறிவுறுத்தலின் படி மறுதேர்வுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பார் என தெரிவித்தனர்.

ஏற்கனவே இவ்விவகாரத்தில் சிறுமியின் பள்ளி ஆசிரியைகள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடைபெறும் என பள்ளியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.