ஜேர்மனியில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை : அகதிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!!

316

ஜேர்மனியில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதி என பொய்யாக நுழைந்த ஈரான் அகதி பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹூசன் என்ற அகதி கடந்த 2015-ல் ஜேர்மனிக்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2016 அக்டோபரில் மரியா லெடன்பர்கர் (19) என்ற மருத்துவ மாணவியை பிரிபேர்க் நகரில் வைத்து ஹூசைன் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மரியாவின் கழுத்தை நெரித்து கொன்று அங்குள்ள ஆற்றில் வீசியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் ஹூசனை கைது செய்த நிலையில் அவர் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் ஹூசன் ஆப்கானிஸ்தான் அகதி என பொய்யாக கூறியதும், நிஜத்தில் அவர் பிறந்தது ஈரானில் எனவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஹுசைனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஏற்கனவே கிரீஸில் பெண்ணை கொலை செய்ய முயன்றதாக கடந்த 2013-ல் ஹுசைனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தது. ஆனால் ஒரு வருடத்திலேயே சிறையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.