தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொன்றது ஏன் : கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!!

312

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை நகைக்காக நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்தவர் சிவராம், இவர் மனைவி கவிதா.

கடந்த 1-ஆம் திகதி கவிதா தனது வீட்டில் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். அவர் வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் காணாமல் போயிருந்தது.

இதை வைத்து நகைக்காக நடந்த கொலை இதுவென உறுதி செய்த பொலிசார் கொலையாளியை தேடி வந்த நிலையில் பலரிடம் விசாரித்தும் வந்தனர்.

அப்படி கிரீஷ் (20) என்ற இளைஞரை பொலிசார் விசாரித்த போது, தனது நண்பர்களான ஆஷிஷ்குமார் (21) மற்றும் அசோக் (24) ஆகியோருடன் சேர்ந்து கவிதாவை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

கிரீஷ் அளித்துள்ள வாக்குமூலத்தில், மது, கஞ்சா போன்ற போதை வஸ்துக்களுக்கு நானும் என் நண்பர்களும் அடிமையாகி விட்டோம். இதையெல்லாம் வாங்க எங்களுக்கு அதிக பணம் தேவைப்பட்டது.

நான் முன்னர் சிவராம்- கவிதா வீட்டின் அருகில் குடியிருந்த போது அவர்கள் பணக்காரர்கள் என்பதை அறிந்தேன். இதையடுத்து ஆஷிகுமார் மற்றும் அசோக்குடன் சேர்ந்து அவர் வீட்டில் திருட திட்டமிட்டோம்.

அதன்படி கவிதா மட்டும் வீட்டில் தனியாக இருக்கும் நேரம் பார்த்து மூவரும் வீட்டுக்குள் நுழைந்து அவர் கழுத்தை அறுத்து கொலை செய்து நகைகளை திருடிவிட்டு அங்கிருந்து தப்பித்து விட்டோம் என கூறியுள்ளார். இதையடுத்து மூன்று இளைஞர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.