பெண்ணைக் கொன்று இதயத்தை சமைத்து சாப்பிட்ட மனித மிருகம்!!

301

ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவன் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்று அவளது இதயம் மற்றும் நுரையீரலை சமைத்து சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவனைப் பிரிந்த Ekaterina Nikiforova (27) தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். Ekaterinaவின் சகோதரரின் நண்பனான Alexey Yastrebov (35) என்பவன்தான் இந்த கொடூர செயலைச் செய்துள்ளான்.

Ekaterinaவை கொன்றுவிட்டு ஒரு கத்திரியை எடுத்து தன் தொண்டையில் குத்திக்கொண்டிருக்கிறான். பின் அந்த வீட்டின் சொந்தக்காரரான Avdeeva என்னும் பெண்ணை அழைத்து, நான் இரத்த வெள்ளத்தில் கிடக்கிறேன், என் பக்கத்தில் ஒரு சவம் கிடக்கிறது என்று கூறியிருக்கிறான்.

Avdeeva உடனடியாக பொலிசுக்கு தகவல் கூற அவர்கள் வந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த அவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது “அவளது இதயம் அடுப்பில் வெந்து கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறான்.

Ekaterinaவுக்கும் அவனுக்கும் ஏதோ பிரச்சினை இருந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். ஏனெனில் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் “ நான் அவளிடம் உன் உன் இதயத்தை சாப்பிடுவேன் என்று கூறியிருந்தேன், அது போலவே செய்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறான்.