உயிரைப் பறித்த தினேஷ் கார்த்திக்கின் சிக்சர்!!

422

வங்கதேச அணியுடனான இறுதிபோட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றதால் ரசிகர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

நிதாஹஸ் டி20 கிண்ண இறுதி போட்டி இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

இப்போட்டியில் கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு கிண்ணத்தை பெற்றுத் தந்தார்.

இந்நிலையில் குஜராத்தின் சூரத்தில் பிரவீன் பட்டேல் (62) என்ற ஆசிரியர், கடைசி பந்தில் இந்திய அணி சிக்ஸர் அடித்து வெற்றி பெற்ற உற்சாகத்தில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

தீவிர கிரிக்கெட் ரசிகரான பட்டேல், தனது குடும்பத்துடன் இறுதிபோட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், பதட்டமான கடைசி பந்தை பார்த்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு சரிந்துள்ளார்.

இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பட்டேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.