கொழும்பிலிருந்து சுற்றுலா சென்ற மாணவன் கொத்மலை ஆற்றில் மூழ்கி பலி!!

518

கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த உயர்தர மாணவன் கொத்மலை ஆற்றில் மூழ்கி பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு ஹமீத் ஹல் உசைனியா தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் உயர்தர மாணவனே இவ்வாறு நேற்று பகல் 1 மணியளவில் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குறித்த பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் 42 மாணவர்களும், இரண்டு ஆசிரியர்களும் நுவரெலியா பிரதேசத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.

நேற்று மீண்டும் கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்த போதே கொத்தலை ஆற்றில் நீராடுகையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.