கிரிக்கெட் வீரர் ஷமியின் ரகசிய உரையாடலை அம்பலப்படுத்திய அவரது மனைவி!!

554

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என அவரது மனைவி ஹசின் ஜஹான் கொல்கத்தா பொலிசில் புகார் அளித்திருந்தார்.

இங்கிலாந்தை சேர்ந்த முகமது பாயின் வற்புறுத்தலின் பேரில் கொல்கத்தாவில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த அலிஸ்பா என்ற பெண்ணிடம் இருந்து முகமது ஷமி பணம் பெற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் கிரிக்கெட் முறைகேடுகளிலும் ஈடுபட்டார் என ஷமியின் மனைவி புகார் அளித்ததையடுத்து இந்த விவகாரத்தில் பிசிசிஐ அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

முகமது ஷமியின் வீட்டுக்கு சென்று கொல்கத்தா பொலிசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு முகமது ஷமியும் அவரது குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.

இந்நிலையில், தனது கணவர் பேஸ்புக் மற்றும் வட்ஸ் அப் வழியாக வேறு ஒரு பெண்ணுடன் உரையாடியதை
அம்பலப்படுத்தியுள்ளார்.

அந்த உரையாடலில் முகமது ஷமி, தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்துகொண்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.