போதையின் உச்சத்தில் ஒருவர் அடித்ததுக் கொலை?

525

திருகோணமலை, புல்மோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரிக்கு செல்லும் பாதையில் காயங்களுடன் சடலம் ஒன்று பொதுமக்களின் தகவலை அடுத்து புல்மோட்டை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

புல்மோட்டை 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் 40 வயதுடைய உபைத்துள்ளா சஹீர் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தின் அருகே காலியான மதுபோத்தலும் நொருக்குத்தீனியும் காணப்படுவதால் மதுபோதையில் ஏற்பட்ட தகராரில் இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.