எனக்கு பின்னால் யாரோ சதி செய்கிறார்கள் : முகமது ஷமி வேதனை!!

463


இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனக்கு பின்னால் இருந்து யாரோ சதி செய்வதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.



சமீபத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஷமியின் மனைவி ஹசின் ஜஹான், தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும், அவர் நாட்டுக்கும் உண்மையாக இல்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான பி.சி.சி.ஐ வீரர்கள் ஒப்பந்தத்தில் ஷமியின் பெயர் இடம்பெறவில்லை. மேலும், இது தற்காலிக முடிவுதான் என்று கூறிய பிசிசிஐ விசாரணை மேற்கொண்டது.



அதன் பின்னர், ஷமி மீதான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என கூறிய பி.சி.சி.ஐ, அவரை ‘B’ Grade-யில் விளையாட ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம், ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஷமி விளையாட உள்ளார்.



இந்நிலையில், இது குறித்து முகமது ஷமி கூறுகையில், என் குடும்ப பிரச்சனை காரணமாக, கடந்த 10, 15 நாட்களாக மனரீதியான Torture-யை அனுபவித்து வந்தேன், என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது.


அவை கனவில் கூட நினைத்திராத கேவலமான குற்றச்சாட்டு, எனக்கு பின்னால் ஏதோ சதி இருக்கிறது. யாரோ, என் குடும்பத்தைப் பிரிக்க பார்க்கிறார்கள், இதில் இருந்து விரைவில் வெளிவருவேன் என தெரிவித்துள்ளார்.