இணைய உலகை அதிர வைக்கும் மற்றுமொரு பாரிய தகவல் திருட்டு!!

462

அண்மைக் காலமாக ஒன்லைன் கணக்குகள் திருடப்படுவது அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது.

இதன் உச்சக்கட்டமாக பேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் அனுமதி இன்று அவர்களின் தனிப்பட்ட தகவல்களை பார்வையிடுவதற்கு சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தமை பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ் அதிர்ச்சியில் இருந்து இணையத்தளப் பாவனையாளர்கள் மீள்வதற்குள் மற்றுமொரு பாரிய தகவல் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதாவது ஒன்லைன் ஊடாக விளையாட்டு உபகரணங்களை விற்பனை செய்வதுடன், டிப்ஸ்களையும் வழங்கிவரும் MyFitnessPal எனும் நிறுவனத்தின் இணையத்தளம் மற்றும் அப்பிளிக்கேஷன் ஊடாக பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 150 மில்லியன் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இச் சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றுள்ள போதிலும் இரு தினங்களுக்கு முன்னரே தெரியவந்துள்ளது.

இவ்வாறான சம்பவங்களை அடுத்த மக்கள் ஒன்லைனில் கணக்குகளை உருவாக்குவதற்கு அச்சப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.