ஆச்சரியமளிக்கும் வடிவமைப்பில் மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு!!

349

அரேபியன் பெனின்சுலாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள பேர்ல் கத்தாரின் செயற்கைகோள் புகைப்படமானது, Binocular(தொலைநோக்கி) வடிவத்தில் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேர்ல் கத்தார் எனும் தனித்தீவு, சுமார் 1.5 சதுர கிலோ மீட்டரில் மனிதர்களால் உருவாக்கப்பட்டதாகும். கத்தார் குடிமகன்கள் அல்லாத வெளிநாட்டவர்கள், இந்தத் தீவின் உரிமையாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில், பேர்ல் கத்தாரின் கழுகுப் பார்வை புகைப்படத்தை விண்வெளியாளர் ஒருவர் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போது, மொத்த பேர்ல் கத்தார் தீவும் Binocular போன்ற வடிவமைப்பில் இருப்பது அழகாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.