வவுனியா மதினா நகர் அல்-அக்சா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு!!

554

வவுனியா மதினா நகர் அல்-அக்சா முன்பள்ளி விளையாட்டு நிகழ்வு இன்று (08.04) பாடசாலையின் தலைவர் என்.எம்.இக்பால் தலைமையில் மதியா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரத விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றியதுடன், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களின் வரவேற்புரை உடற்பயிற்சி நிகழ்வு, விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எஸ்.எம்.பாரி, சமாதனா நீதவான் ஏ.ஆர்.எம்.பைசர், அல்மதினா விளையாட்டு கழகத் தலைவர் யு.அயூப்கான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.