செவ்வாய்க்கு செல்லும் தேனீக்கள்!!

372

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு ரோபோ தேனீக்களை இன்னும் 2 வருடங்களில் அனுப்ப திட்டமிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள ‘ரோவர்’ கருவி மிக மெதுவாக நகர்ந்து ஆய்வு செய்து ஆராய்ச்சி முடிவுகளை அனுப்புவதால் பூமிக்கு தகவல்களை அனுப்ப அதிக நேரமாகிறது.

இந்த ரோவர்’ கருவி அதிக எரிபொருட்களை எடுத்து கொள்கிறது. மேலும் இது அனுப்பும் தகவல்கள் சில நேரங்களில் சரியாக இருப்பதில்லை. எனவே இதை கைவிட விஞ்ஞானிகள் முடிவு செய்து அதற்கு பதிலாக ‘ரோபோ’ தேனீக்களை அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

இதற்கு ‘மார்ஸ் பீஸ்’ என பெயரிட்டுள்ளனர். இவை 3 முதல் 4 சென்டி மீட்டர் அளவிலானவை. இந்த தேனீ ரோபோவில் சிறிய கமெரா, சிறிய சென்சார் என்று நிறைய வசதிகள் இருக்கும். ஒவ்வொரு தேனீயிலும் ஒவ்வொரு வசதியை ஏற்படுத்தி 20க்கும் மேற்பட்ட ‘ரோபோ’ தேனீக்களை செவ்வாயில் பறக்க வைக்க தீர்மானித்துள்ளனர்.

தேனீ ரோபோக்களில் சிறிது நேரம் மட்டுமே சார்ஜ் இருக்கும் என்பதால் ரேபாபோக்களுடன் ஒரு ரோவர் அனுப்பப்பட உள்ளது. இதை வைத்து அனைத்து ரோபோக்களுக்கும் ‘சார்ஜ்’ செய்ய முடியும்