வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகே காணப்படும் பொலிஸ் காவல் அரன் இன்று (15.04.2018) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகே காணப்பட்ட பொலிஸார் காவல் அரன் மீது CT-100 , பல்சர் ரக மோட்டார் சைக்கிலில் வந்த இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டதுடன் அதனை தூக்கி அருகே வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவத்தினை நேரில் கண்ட சாட்சிகள் இருப்பதாகவும் சி.சி.ரி.வி காணொளியில் உதவியுடனும் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.