வவுனியாவில் இனந்தெரியாத நபர்களினால் பொலிஸ் காவலரண் சேதம்!!

321

 

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகே காணப்படும் பொலிஸ் காவல் அரன் இன்று (15.04.2018) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகே காணப்பட்ட பொலிஸார் காவல் அரன் மீது CT-100 , பல்சர் ரக மோட்டார் சைக்கிலில் வந்த இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டதுடன் அதனை தூக்கி அருகே வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தினை நேரில் கண்ட சாட்சிகள் இருப்பதாகவும் சி.சி.ரி.வி காணொளியில் உதவியுடனும் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.