வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!!

433


 

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று (14.04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,



415 நாட்களாக எமது பிள்ளைகளை தேடி போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் புதுவருட தினத்தில் தமது பிள்ளைகளைப் பற்றிய தகவல்களை கூட பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறவில்லை என தெரிவித்தும் தமிழ் அரசியல்வாதிகள் தமது நிலை தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை எனவும் தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் 415 நாட்களைக்கடந்து இடம்பெற்றுவருகின்றபோதும் இவர்களுக்கு இதுவரை தீர்வு வழங்கபபடவில்லை.