சிரியாவில் அப்பாவி மக்களை கொல்வதற்கு இதைத் தான் பயன்படுத்தியுள்ளனர் : அதிர்ச்சித் தகவல்கள்!!

356

 

சிரியாவில் நடந்த கெமிக்கல் தாக்குதலில் பெருமளவு குளோரின் மற்றும் சரின் போன்ற கொடிய நச்சு வாயுவையே அவர்கள் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட கொடிய ரசாயன ஆயுதங்களை சிரியா அரசு பயன்படுத்தி அங்கிருகும் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதாக அமெரிக்க போன்ற நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

கடந்த 7ஆம் திகதி சிரியாவின் கிழக்கு கவுட்ட பகுதிக்கு உட்பட்ட Douma நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் நடத்திய ரசாயன ஆயுத தாக்குதலில் 75-க்கும் அதிகமானோர் பரிதாபமாக மூச்சுத்திணறி பலியாகினர்.

இந்த ரசாயன தாக்குதலுக்கு பின்னால் சிரியா ஜனாதிபதி Bashar al-Assad இருப்பதாகவும், அப்பாவி மக்கள் இனிமேலும் சாகக் கூடாது என்பதற்காக அமெரிக்க கூட்டுப் படையுடன் இணைந்து பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடந்த வெள்ளிக் கிழமை சிரியாவின் ரசாயன ஆயுத குடோன்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில் பிரான்சைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனம் சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதல் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த ஓராண்டில் மட்டும் சிரியாவில் 12 முறை ரசாயான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 11 தாக்குதலில் பெரும்பாலானோர் கொடிய நச்சு வாயுவின் காரணமாகவே இறந்துள்ளனர்.

44 வகையான இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர், அதில் பெரும்பாலும் குளோரின் மற்றும் சரினையே இரசாயன தாக்குதலுக்கு பயன்படுத்தியுள்ளனர். பிரங்கி குண்டுகளின் உள்ளே வைத்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.