ஆர்யாவிற்கு ஆப்புக்கு மேல் ஆப்பு : அடுத்த அதிர்ச்சி கொடுத்த தொலைக்காட்சி நிறுவனம்!!

564

ஆர்யாவின் நிகழ்ச்சி விறுவிறுப்பைத் தாண்டி யாரை ஆர்யா கரம் பிடிக்க போறார் என்ற ஆர்வம் தமிழ்நாடு மக்களுக்கு மட்டும் அன்றி உலக தமிழர்களும் ஆவலுடன் எதிர் பார்த்த வண்ணம் உள்ளனர்.

16 பெண்களுடன் ஆரம்பித்த நிகழ்ச்சி தற்போது மூன்று பெண்களுடன் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. அடுத்த வாரமளவில் தெரிந்து விடும் யார் அந்த அதிஷ்டசாலி என்று. நிகழ்ச்சியில் இரண்டு கேரளப் பெண்களுடன் ஒரு யாழ்ப்பாணப் பெண்ணும் போட்டியில் உள்ளார்.

இது இவ்வாறிருக்க, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிளை தொடங்கும் போதே ஒரு நிபந்தனையின் கீழ் தான் ஆர்யா நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பெண்ணை கண்டிப்பாக ஆர்யா திருமணம் செய்ய வேண்டும் என்பதாகும். இது கூடப் பரவாயில்லை. இன்னொரு கண்டிப்பான நிபந்தையும் உள்ளது.

அது என்னவென்றால், ஆர்யா மனம் முடிக்கும் பெண்ணுடன் திருமணமான நாளில் இருந்து இரு வருடங்களுக்கு எந்த பிரச்சனைகள் வந்தாலும் விவாகாரத்தோ, பிரிந்து இருப்பதோ முடியாது. அந்த இரண்டு வருடங்களுக்கு இரண்டு இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தியே ஆக வேண்டும் என்பதாகும்.

இதை அறிந்த நெட்டிசன்கள் ஆர்யாவையும் அந்த நிகழ்ச்சியையும் கலாய்த்து வருகின்றனர்.