முல்லைத்தீவு – மாங்குளம், நீதிபுரம் பகுதியில் தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகிய சிறுவன் வவுனியா வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுவனின் இரு கால்களும் முறிந்த நிலையில், கை, முகம், முதுகு பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கோ.இசைப்பிரியன் என்ற 12 வயது சிறுவனவே இவ்வாறு தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த சிறுவன் கடந்த சில நாட்களாக வீட்டிற்கு வராமல் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டிற்கு வந்த சிறுவனை அவரது தந்தை கடுமையாக தாக்கியுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவனை மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், மேலதிக சிகிச்சைக்காக அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.