மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை!!

613


மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தங்கல்ல, குடாவெல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்து குறித்த பெண்ணின் கணவர் சூரியவெல்ல பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.