தொப்புள் கொடியோடு சிக்கிக் கிடந்த குழந்தை : அதிர்ச்சியடைந்த துப்புறவு ஊழியர்!!

489

கேரளாவில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை கழிவறையில் இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த வெள்ளிக் கிழமை காலை Abdul Rehman என்ற மருத்துவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது கழிவறை சுத்தம் இல்லாமல் இருந்த காரணத்தினால் அவர் கழிவறையை சுத்தம் செய்யும் ஊழியரிடம் கூறியுள்ளார்.

அதன் பின் அந்த நபர் கழிவறையை சுத்தம் செய்த போது, உள்ளே ஏதோ பந்து தான் சிக்கியுள்ளது என்று எண்ணி மிகவும் கஷ்டப்பட்டு வெளியில் எடுத்த போது அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஏனெனில் அவர் வெளியில் எடுத்தது பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தை, தொப்புள் கொடியோடு இருந்ததால், உடனடியாக அவர் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக கூறி பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு வந்த பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.