என் வீட்டில் இருந்த தங்ககட்டியை திருடிவிட்டனர் : நடிகர் பார்த்திபன்!!

400

பிரபல நடிகரான பார்த்திபன் வீட்டில் தங்ககட்டி திருடப்பட்டுவிட்டதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சென்னை திருவான்மையூரில் உள்ள காமராஜர் நகரில் வசித்து வருகிறார். இவரது மகளான கீர்த்தனாவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் அவர் வீட்டில் உள்ள பீரோவை வழக்கம் போல் திறந்து பார்த்துள்ளார். அப்போது உள்ளே இருந்த தங்கக்கட்டி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து பார்த்திபன் பொலிசி புகார் அளித்துள்ளதால் அவரது வீட்டில் உள்ள வேலையாட்கள் இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.