திருடிய பணத்தை நடுரோட்டில் பறக்கவிட்டு தவித்த திருடன் : வைரலாகும் வீடியோ!!

717

பிரித்தானியாவில் திருடிய பணத்தை நடுரோட்டில் பறக்கவிட்டு திருடன் தவித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது. மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு டிராவல் ஏஜன்சி அலுவலகத்துக்குள் இரண்டு கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்த பணத்தை திருடியுள்ளனர்.

பின்னர் இருவரும் சாலையில் நடந்து சென்றனர். அப்போது ஒரு கொள்ளையனின் ஜீன்ஸ் பையில் வைத்திருந்த பணம் அங்கு வீசிய பலத்த காற்று காரணமாக சாலையில் பறக்க ஆரம்பித்தது. இதை பார்த்து பதறிய ஒரு கொள்ளையன் பணத்தை பிடிக்க முயல, மற்றொருவரோ செய்வதறியாது திகைத்து நின்றார்.

அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கமெராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில் இதை அடிப்படையாக வைத்து கொள்ளையர்களை பொலிசார் தேடி வருகிறார்கள்.