வவுனியா மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சுகாதாரப் பிரிவினர்!!

317

 

வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள சிற்றுண்டி விற்பனை நிலையத்தினை நேற்று (18.04.2018) மாலை 5.30 மணியளவில் வவுனியா சுகாதார பிரிவினர் சுற்றுவளைத்து முற்றுகையிட்டனர்.

வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகே காணப்படும் நடமாடும் விற்பனை நிலையத்தில் உணவுகள் சீர்கேடான முறையில் விற்பனை செய்வதாக வவுனியா சுகாதார பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு இனங்க நேற்று (18.04.2018) மாலை திடீர் சோதனையின் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டனர்.

இதன் போது நடமாடும் விற்பனை நிலையத்தில் சுகாதார சீர்கேடான முறையில் வடை, ரோல் என்பன காணப்பட்டதுடன் குறித்த விற்பனை நிலையத்தின் பணியாளருக்கு மருத்துவ சான்றிதழ் காணப்படவில்லையெனவும் பொது இடத்தில் வைத்து உணவு தயார் செய்தல் போன்ற பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து குறித்த நிலையத்தின் உணவு பொருட்கள் , பொருட்கள் என்பவற்றை சுகாதார பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யவுள்ளாகவும் மேலும் வவுனியா நகரில் உள்ள வியாபார நிலையங்களில் இவ்வாறான திடீர் சோதனை நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.