தாயின் நண்பரை 22 முறை குத்திக் கொன்ற மகன்!!

297

இந்தியாவில் இளைஞர் ஒருவர் தனது தாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபரை 22 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் துவாரகா பகுதியில் வசிப்பவர் அமான்(20). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இவர், ஒருநாள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது, தனது தாயுடன் ஒருவர் வாக்குவாதம் செய்வதைக் கண்டுள்ளார்.

அவர்கள் பேசிக் கொண்டதன் மூலம், அந்நபர் தனது தாயுடன் தகாத உறவு வைத்திருந்ததை அமான் அறிந்து கொண்டார். அதன் பின்னர், அங்கிருந்து சென்றுவிட்ட ராஜூ(40) என்ற அந்த நபர் சில நாட்கள் அமானின் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.

எனினும், மீண்டும் அமான் வீட்டிற்கு சென்ற ராஜூவை, அமான் கடுமையாக எச்சரித்துள்ளார். ராஜூவும் இனி தான் வரமாட்டேன் என கூறியுள்ளார். இந்நிலையில், ராஜூ தனது நடவடிக்கையை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த அமான், அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

ராஜூ குறித்து தனது அலுவலக நண்பர்களிடம் அமான் கூறியவுடன், அவர்களும் கொலை திட்டத்திற்கு உதவி புரிவதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தனது நண்பர்களுடன் ராஜூவை சந்தித்த அமான், அவரை கடுமையாக தாக்கியுள்ளார். அதன் பிறகு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து 22 முறை ராஜூவை குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர், அங்கிருந்து மூன்று பேரும் தப்பியோடி விட்டனர், கத்திக் குத்தால் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜூவைக் கண்ட பொதுமக்கள் சிலர், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் வழியிலேயே இறந்துள்ளார்.

இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அமானுக்கு உதவி செய்தவர்கள் ஆசிஷ்(21), சஹில்(19) என்பது தெரிய வந்தது.

அதன் பின்னர், அமானின் வீட்டை மறைமுகமாக கண்காணித்த பொலிசார், அமான் வீட்டிற்கு வரும் நேரம் பார்த்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, அமானின் நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்.