தொடக்கூடாத இடத்தில் கை வைத்தார் : தமிழக  ஆளுநரை தொடரும் அடுத்த சர்ச்சை!!

494


 

நிர்மலா தேவி விவகாரம் தொடர்பில் ஆளுநர் மீது சந்தேசம் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது. தமிழகம் முழுவதும் நிர்மலா தேவி விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, இது தொடர்பாக விளக்கம் அளிக்க செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தடவிக்கொடுத்தார்.



இது பூதாகரமாக வெடிக்க நேற்று பகிரங்க மன்னிப்பும் கோரினார். இந்நிலையில் சமீபத்தில் கோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போதும் அங்கு நடனமாடிய பெண்ணினை தொடக்கூடாத இடத்தில் தொட்டதாக புது சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதுகுறித்து பனசை அரங்கன் என்பவர் பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள தகவலில், கடந்த 13ம் திகதி திருவையாறு அருகு உள்ள கல்யாணபுரம் புகழ்பெற்ற சீனிவாச பெருமாள் கோவில் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையை தொடங்கி வைக்க ஆளுநர் வந்திருந்தார்.



இவரை வரவேற்கும் விதமாக விழா குழுவினர் சார்பில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு சால்வை போர்த்தி ஆளுநர் பாராட்டினார்.



அப்போது ஒரு பெண்ணின் கன்னத்தை தட்டிக் கொடுத்து, தொடக்கூடாத இடத்தில் கை வைத்தார். அப்போது இச்செயல் சாதாரணமாக தெரிந்தாலும், இப்போது தான் அதன் அர்த்தம் புரிகிறது.


இவ்வளவு சர்ச்சைகள் மிகுந்த ஆளுநரை உடனடியாக மத்திய அரசு பதவியிலிருந்து நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.