மீண்டும் குரல் கொடுக்க களத்தில் இறங்கிய நடிகர் சிம்பு : சேலத்தில் பரிசலில் பயணம்!!

293

 

பிரபல திரைப்பட நடிகரான சிம்பு இன்று சேலத்தில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்தார். தமிழகத்தில் தற்போது காவேரி விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இதற்காக திரையுலகினர் போராட்டம் நடத்திய போது, சிம்பு அதில் கலந்து கொள்ளாமல் தனியாக வீட்டில் இருந்து காவேரி விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கர்நாடக மக்கள் தண்ணீர் கொடுப்பார்கள் என்று கூறினார். அதே போன்று அவர்களும் தமிழர்களுக்கும் தண்ணீர் கொடுப்பது தொடர்பான வீடியோவை வெளியிட்டனர். அது சமூகவலைத்தளங்களில் வைரலாகியது மட்டுமின்றி சிம்புவை அனைவரும் பாராட்டினர்.

இந்நிலையில் சிம்பு இன்று காலையிலிருந்தே சேலத்தில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்தார். சேலத்தில் இருக்கும் பல்வேறு ஏரிகளை ஆய்வு செய்யவுள்ள இவர், குறிப்பாக முக்கனேரி ஏரியில் பரிசலில் பயணித்து அந்த நிர்நிலைகளை பார்த்து வருகிறார்.

இதன் பின் சேலம் மக்களின் நீண்ட நாள் பிரச்சனையான குப்பமேடு என்ற கிச்சி பாளையத்திற்கு சிம்பு செல்லவுள்ளதாகவும், இதைத் தொடர்ந்து இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிம்புவின் இந்த திடீர் வருகைக்கு சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ்மாருஸ் தான் காரணம் எனவும், காவேரி விவகாரம் குறித்து சிம்பு பேசியதால் அவர் சேலத்திற்கு சிம்புவை அழைத்ததாக கூறப்படுகிறது.