40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நபர் : சேர்த்து வைத்த யூடியூப் பாடல்!!

353


இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நபர் யூ டியூப் வீடியோ மூலம் தன்னுடைய குடும்பத்தில் இணைந்துள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பாலைச் சேர்ந்த கோந்ராம் காம்பீர் சிங் என்பவர் 1978-ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வீட்டை விட்டு வெளியேறியவர் திரும்பவே இல்லாத காரணத்தினால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர்.



காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு பைரோ சாபிர் என்பவர் தன்னுடைய யூ டி யூப் சேனலில் காம்பீர் சிங் பாடிய ஹிந்தி பாடலை பதிவேற்றம் செய்துள்ளார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக இது குறித்து வீடியோவை சுட்டிக் காட்டி மீட்டுத் தரும்படி காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மும்பைக்கு சென்ற பொலிசார் காம்பீர் சிங்கை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். அப்போது காம்பீர் சிங் தன்னுடைய குடும்பத்தினரைக் கண்டவுடன் எண்ணற்ற மகிழ்ச்சியில் அவர்களை கட்டி அணைத்துக் கொண்டார்.