5 வயதுச் சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த இளைஞனுக்கு மக்கள் கொடுத்த தண்டனை!!

300


திருவள்ளூர் அருகில் 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வடமாநிலத்தை சேர்ந்த இளைஞரை அப்பகுதி மக்கள் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சின்ராத்- சம்சா தம்பதியினர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள், இவர்கள் திருவள்ளூரில் உள்ள போராக்ஸ் பகுதியில் 7 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.



இந்த போராக்ஸ் பகுதியில் இன்னபிற வடமாநிலத்தவரும் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சின்ராத்- சம்சா தம்பதியினரின் 5 வயது மகள் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அதே பகுதியில் வசித்து வரும் பரவத் சிங் சிறுமியை தூக்கி சென்று, ஆள்நடமாட்டம் இல்லாத வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார். ஆனால் இந்த வக்கிர செயல் குறித்து புரிந்துகொள்ளும் ஆற்றல் அந்த சிறுமியிடம் இல்லை என்றாலும், நடந்ததை அவரது பெற்றோரிடம் அப்படியே தெரிவித்துள்ளார்.



உடனடியாக சிறுமியை மருத்துவமனை கொண்டுசென்று பரிசோதித்த பின்னர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.



மேலும் சிறுமிக்கு மேல் சிக்கிச்சை தேவைப்படுவதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள், குறித்த இளைஞரை சரமாரியாக அடித்து பொலிசிடம் ஒப்படைத்தனர்.