கட்டுப்படுத்தமுடியாத காதலால் பாடசாலை மாணவனை கடத்திய இளம்பெண்!!

496

தருமபுரி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் பள்ளி மாணவன் மீது கட்டுக்கடங்காத காதல் கொண்டதால் அந்த மாணவனையே கடத்திய குற்றத்திற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விவசாயியான தசரதன் என்பவரின் 15 வயது மகன் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த மாணவனுக்கும், அவரது உறவினர் மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தசரதன் கண்டித்துள்ளார். இந்நிலையில், மாணவன் திடீரென காணாமல் போயுள்ளான். இதுகுறித்து தந்தை தசரதன் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையில், மாணவனை பெங்களூருக்கு இளம்பெண் கடத்தி சென்றுள்ளது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இருவரும் தமருபுரி அழைத்துவரப்பட்டனர். மாணவனை குழந்தைகள் நலக்காப்பகத்தில் ஒப்படைத்தனர். இளம்பெண்ணை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.