திருமணமான பெண்ணுடன் பழக்கம் : நடிகை புவனேஸ்வரியின் மகன் கைது!!

334

திருமணம் ஆன பெண்ணை அடித்து உதைத்ததற்காக நடிகை புவனேஸ்வரியின் மகனை பொலிசார் கைது செய்துள்ளனர். சாலிகிராமத்தை சேர்ந்த உதயா என்ற பெண்மணி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை, 10 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்துவிட்டார்.

இந்நிலையில், பேஸ்புக் மூலம் நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுன் சீனிவாசன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரது நட்பு, காதலாக மாறி உள்ளது.
பின் உதயாவை திருமணம் செய்து கொள்வதாக மிதுன் கூறியுள்ளான். ஆனால், மிதுன், குடி மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமை என உதயாவிற்கு தெரியவந்தது. இதையடுத்து, அவனை திருமணம் செய்து கொள்ள மறுத்தார்.

மிதுன் சமரசம் பேச, உதயாவை அவரது வீட்டிற்கு அழைத்தார். அங்கு சென்ற உதயாவை, தன்னை திருமணம் செய்ய வேண்டும் என மிரட்டியதுடன், அவரை அடித்து உதைத்துள்ளார். உதயா அளித்த புகாரின் படி மிதுன் சீனிவாசனை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.