இந்தியா என்பது ஓர் பொறுக்கி தேசம் : திருமுருகன் காந்தி ஆவேசம்!!

295

இந்தியா என்பது ஓர் பொறுக்கி என விமர்சித்துள்ளார் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. நீட் தேர்விலிருந்து நிரந்த விலக்கை வலியுறுத்தி தமிழ்நாடு – புதுச்சேரி அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழர் உரிமைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மாநாடு நேற்று சென்னையில் நடைபெற்றது.

மாநாட்டில் திருமுருகுகன் காந்தி, சீமான், நடிகர் சத்யராஜ், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்களும், பிரபலங்களும் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “நாடு முழுக்க ஒற்றைக்கல்வி முறை இல்லாதபோது எதற்காக வேண்டி இங்கு நீட் தேர்வு திணிக்கப்படுகிறது.

கார்ப்பரேட் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஆக்டோபஸ் கரங்களை எளியோர்களுக்கான கல்வி – மருத்துவத்திலும் நுழைத்திட துணிந்துள்ளது. அதற்கு மத்திய பாஜக அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது.” என பேசினார். மேலும், பல தேசிய இனங்களின் உரிமைகளை சிதைத்துப்போட்டுக்கொண்டிருக்கிற இந்தியா ஓர் பொறுக்கி தேசம் என மிக காத்திரமான விமர்சனத்தை முன்வைத்தார்.