மரத்தில் இருந்து தவறி விழுந்து 4 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாகப் பலி!!

506

 

மஸ்கெலியா – மொட்டிங்ஹேம் தோட்டத்தில் உள்ள மரத்தில் ஏறிய ஒருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று மாலையில் இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் கூறியுள்ளனர். 51 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான எம்.கந்தசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தனது வீட்டிற்கு விறகுகளை வெட்டுவதற்கு பாரிய மரத்தின் உச்சியில் ஏறியுள்ளார்.
இதையடுத்து மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து தலை அடிப்பட்டதினால் இவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் மஸ்கெலியா வைத்தியசாலையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.