தென்னை மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் பலி!!

342


முல்லைத்தீவு – உடையார் கட்டு, மாணிக்கபுரம் பகுதியில் தென்னை மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஜேசப் அந்தோனி என்பவர் நேற்று பிற்பகல் 1.30 பாரதிபுரத்தில் உள்ள அவரது தென்னந்தோப்பிற்கு சென்று தேங்காய் பறித்துள்ளார்.



இதன்போது, தென்னை மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நீண்ட நேரமாகியும் இவரை காணவில்லை என அயலவர்கள் தேடிப்பார்த்தபோது, உயிரிழந்த நிலையில் தென்னைமரத்தின் கீழ் விழுந்து கிடப்பதை கண்டுள்ளார்கள் .

உடனடியாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, பொலிஸார் சடலத்தை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.