மாணவியுடன் தலைமறைவான ஆசிரியர் : தப்பிக்க செய்த வேலை!!

321

தமிழ்நாட்டில் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய ஆசிரியர், ப்ளஸ்-2 மாணவியைக் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் ராஜேஷ்வர்ஷன் என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணமான நிலையில் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார்.

பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவது, வட்ஸ்அப்பில் ஆபாசப் புகைப்படங்களை அனுப்புவது போன்ற சில்மிஷங்களில் ராஜேஷ்வர்ஷன் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், ப்ளஸ்-2 மாணவி ஒருவரை காதல் வலையில் வீழ்த்திய ராஜேஷ்வர்ஷன் இரு தினங்களுக்கு முன், அந்த மாணவியுடன் தலைமறைவானார்.

முன்னதாக, யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் தன் தம்பி உதவியுடன் பள்ளி வளாகத்தைச் சுற்றி தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.

பள்ளியில் வேலைபார்த்து வந்த ஆசிரியர் இறந்துபோனால், வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்துவார்கள். இங்கே, ராஜேஷ்வர்ஷன் வீட்டுக்கு ஆசிரியர்கள் யாரும் போகவில்லை.

மாணவியைக் காணாத பெற்றோர் பொலிசில் புகார் செய்துள்ள நிலையில் மாணவியுடன் தலைமறைவான ஆசிரியரைப் பொலிசார் தேடி வருகிறார்கள்