காதலனின் மனைவியை கொல்ல கூலிப்படை : இளம்பெண் சிக்கியது எப்படி?

399


காதலரின் மனைவியை கொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்த கேரள செவிலியர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்தவர் டினா ஜோன்ஸ் (31), இவர் அமெரிக்காவில் உள்ள லயோலா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் செவிலியராக பணிபுரிகிறார்.



அதே மருத்துவமனையில் பணிபுரியும் திருமணமான மருத்துவர் ஒருவருடன் டினாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. மருத்துவரின் மனைவியும் அதே மருத்துவமனையில் பணிபுரியும் நிலையில், தான் அவருடன் பழகுவது அவர் மனைவிக்கு தெரிந்துவிட்டதோ என டினாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவரின் மனைவியை கொலை செய்ய முடிவெடுத்த டினா அதற்காக இணையதளம் மூலம் கூலிப்படையை தேடியுள்ளார். அதில் 10 ஆயிரம் டொலர் பிட் காயின் கட்டி மருத்துவர் மனைவியை கொல்ல வேண்டும் என டினா கூறிய நிலையில், அந்த ஓன்லைன் பக்கம் போலி என தெரியவந்தது.



இந்த விடயம் பொலிசாருக்கு தெரிந்த நிலையில் டினாவை கைது செய்தனர். தற்போது பிணையில் வெளிவந்திருக்கும் டினா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.